பன்னீர் பட்டருக்கு பதில் பட்டர் சிக்கன் டெலிவரி... ஸொமாட்டாவுக்கு 55,000 அபராதம்
பன்னீர் பட்டருக்கு பதில் பட்டர் சிக்கன் டெலிவரி... ஸொமாட்டாவுக்கு 55,000 அபராதம் ஓட்டல் நிர்வாகம் உணவை மாற்றி அனுப்பியதாக ஜொமாட்டோ நிறுவனம் நுகர்வோர் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது மகாராஷ்டிர மாநிலம் புனேவைச் சேர்ந்த வழக்கறிஞரான ஷன்முக் தேஷ்முக் ஜெமாட்டோ ஆப் மூலம் பன்னீர் பட்டர் மசாலா ஆர்டர் செய்துள்ளார். ஆனால் பன்னீர் பட்டர் மசாலாவுக்கு பதிலாக அவருக்கு பட்டர் சிக்கன் டெலிவரி செய்யப்பட்டது. அது பட்டர் சிக்கன் என்று தெரியாமல் அவரும் அதை சாப்பிட்டார். பின்னர் அது பட்டர் சிக்கன் என்று தெரிந்ததும் ஆத்திரமடைந்த அவர் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள ஜொமாட்டோ நிறுவனம், ஓட்டல் நிர்வாகம் உணவை மாற்றி அனுப்பியதாகவும், தவறு நடந்ததால் பணத்தை வழக்கறிஞருக்கு திருப்பி கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளது. ஆனால் வழக்கை விசாரித்த நீதிபதி ஜெமாட்டோ நிறுவனம் மற்றும் ஓட்டல் நிர்வாகம் 45 நாட்களுக்குள் ரூ.55,000-த்தை அபராதமாக தர வேண்டும் என்று | உத்தரவிட்டார்.