தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் 20-ந்தேதியுடன் நிறைவடைகிறது

வேலூர் பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலால் வரும் 30-ந் தேதி முடிவடைய வேண்டிய தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் பத்து நாட்கள் முன் னதாக 20-ந்தேதியே நிறை வடைகிறது. தமிழக சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி மாதம் 8-ந்தேதி 2019 20ஆம் ஆண்டுக்கான பட் ஜெட் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதை யடுத்து மக்களவைத் தேர்தல் நெருங்கியதால், பட்ஜெட் மீதான விவாதத்துக்குப் பிறகு மானியக் கோரிக்கைகள் மீதான் விவாதம் நடைபெறாமலேயே பேரவை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது. பாராளுமன்ற தேர்தல் முடிந்த நிலையில், துறை வாரியாக மானியக் கோரிக் கைகள் தாக்கல் செய்யப்பட்டு நிதி ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் பெறுவதற்காக, சட்டப்பேர வைக் கூட்டத் தொடர் ஜூன் 28-ந்தேதி தொடங்கியது. ஜூலை 30 வரை இந்த கூட்டத் தொடர் நடைபெறும் என் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில், முன்னர் ஒத்திவைக்கப்பட்ட வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கு ஆகஸ்ட் 5-ந்தேதி இடைத் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள் ளது. இந்நிலையில், தமிழ்நாடு அரசின் தலைமை செய லகக்கில் இன்று சட்டசபை அலுவல் ஆய்வக் குழு கூட்டம் நடைபெற்றது. சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் வேலூர் பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலால் வரும் 30-ந் தேதி முடிவடைய வேண்டிய தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் பத்து நாட்கள் ள முன்னதாக 20-ந்தேதியே நிறைவடையம் என அறிவிக் கப்பட்டுள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்