சவுதி கூட்டுப்படைகள் நடத்திய வான்வழி தாக்குதலில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

சவுதி . ஏமன் நாட்டில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது சவுதி கூட்டுப்படைகள் நடத்திய வான்வழி தாக்குதலில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். ஏமன் தலைநகர் சனாவில் சவுதி படைகள் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமடைந்தனர் என்று சவுதியின் தேசிய ஊடகம் செய்தி வெளியிட்டது. கடந்த ஜூனில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் சவுதியின் அபா விமான நிலையத்தில் தொடர் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக சவுதி மீண்டும் தாக்குகிறது. தென்மேற்கு ஆசிய நாடான ஏமனில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஹதியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிபடைக்கும் இடையே கடந்த 2005 மார்ச் முதல் உள்நாட்டு பேர் நடக்கிறது. இதில் அதிபர் மன்சூருக்கு ஆதரவாக சவுதியும், ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக ஈரானும் செயல்படுகிறது. சவுதி தொடர்ந்து கிளர்ச்சியாளர்கள் மீது நடத்தும் தாக்குதல் தொடர்கிறது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)