வைகோ - அன்புமணி போட்டியின்றி எம்பிக்களாகிறார்கள்

மாநிலங்களவை தேர்தலில் வைகோ, அன்பு மணி உட்பட அதிமுக மற்றும் திமுக வேட் பாளர் 6 பேரும் போட்டியின்றி எம்.பி.க் களாக தேர்வு செய்யப்படுகின்றனர். நாடாளுமன்ற மாநிலங்களவையில் தமிழக எம்.பி.க் கள் 6 பேரின் பதவிக்காலம் வருகிற 24-ந்தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிதாக 6 எம்.பி.க்களை தேர்வு செய்ய வருகிற 18-ந்தேதி தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 6 நாடாளுமன்ற மேல்- சபை எம்.பி.க் களை தமிழக சட்டசபை எம்.எல்.ஏ.க்கள் தேர்வு செய்ய வேண்டும். எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் கணக்கிட் டால் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் 3 எம்.பி.க்களையும் தி.மு.க. கூட்டணி சார் பில் 3 எம்.பி.க்களையும் தேர்வு செய்ய முடியும். அ.தி.மு.க. வேட்பாளராக சிறுபான்மை யினர் நலப்பிரிவு இணைச் செயலாளரான வேலூரை சேர்ந்த முகமது ஜான், மேட்டூர் நகரச் நகரச் செயலாளர் சந்திரசேகரன் ஆகியோர் நிறுத்தப்பட்டுள்ளனர். அ.தி.மு.க. தோழமை கட்சியான பா.ம.க. சார்பில் அன் புமணி ராமதாஸ் பேட்டியிடுகிறார். இவர் கள் 3 பேரும் இன்று மனுத்தாக்கல் செய்கின்றனர். தி.மு.க. வேட்பாளர்களாக தொ.மு.ச. பொதுச் செயலாளர் சண்முகம், வழக்கறிஞர் வில்சன் ஆகியோரும் கூட்டணி கட்சியான ம.தி.மு.க. சார்பில் பொதுச்செயலாளர் வைகோவும் நிறுத்தப்பட்டுள்ளனர். இவர் கள் நேற்று முன்தினம் மனு தாக்கல் செய் துள்ளனர். வேட்பு மனுக்கள் பரிசீலனை நாளை 9-ந்தேதி) நடைபெறுகிறது. மனுக்களை திரும்ப பெற 11-ந்தேதி கடைசி நாளாகும். தற்போதைய நிலவரப்படி வைகோ, அன்புமணி ராமதாஸ் உள்பட அ.தி.மு.க. - தி.மு.க. வேட்பாளர்6 பேரும் போட்டியின்றி எம்.பி.க்களாக தேர்வு செய்யப்படுகின்றனர். சுயேட்சைகளின் மனுக்கள் நாளை தள்ளுபடி செய்யப்பட்டுவிடும் என்பது குறிப்பிடத்தக் கது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)