காணொலிக் காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல்

உலக முதலீட்டாளர் மாநாட்டில் ஒப்பந்தமிடப்பட்ட 16 நிறுவனங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். உலக முதலீட்டாளர் மாநாட்டில் 3 லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 2515 கோடி ரூபாய் முதலீட்டிலான 16 நிறுவனங்களுக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலிக் காட்சி மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார். இந்த நிறுவனங்கள் மூலம் 9 ஆயிரத்து 304 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் எம்சி சம்பத் உள்ளிட்டோர் இருந்தனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)