தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யுங்கள்

கால அவகாசம் நிர்ணயம் செய்ய முடியாது தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யுங்கள் சி.பி.ஐ.க்கு மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவுமதுரை,ஜூன்.23தூத்துக்குடி துப்பாக் கிச்சூடு வழக்கில் சிபிஐ தரப்பில் இதுவரை எடுக்கப் பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய சிபிஐக்கு உயர் நீதிமன்ற மதுரை உத்தரவு பிறப்பித்தது. தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த ஆண்டு மே மாதம் பொதுமக்கள் ஊர்வலம் சென் றனர். அப்போது அவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலர் பலியானார்கள். இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரித்து வருகிறது. இந்தநிலையில் மதுரை ஐகோர்ட்டில் சிபிஐ இயக்குனர் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், "தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான வழக்கை 4மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ண்டு ஆகஸ்டு மாதம் ஐகோர்ட்டு உத்தரவிட்டது. துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப் பட்ட 222 வழக்குகளையும் ஒரே வழக்காக பதிவு செய்து மாணவ, மாணவியர்கள் உரை நிகழ்த்தினார்போட்டு மக்கள் காலில் சிபிசிஐடி விசாரித்தது. பின்னர் அந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. அதன் அடிப்படையில் பல்வேறு விசாரணை நடத்தப் பட்டுள்ளது. மேலும் விசாரணை செய்ய வேண்டி இருப்பதால், இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஏற்கனவே வழங்கப்பட்ட அவகாசத்தை நீட்டித்து உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி .: போர் மன்ரோ ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு துப் வந்தது. : அப்போது சிபிஐ தரப்பு வக்கீல் ஆஜராகி, "தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மதுரை உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் சிபிஐ போலீசார் விசாரிக்கின்றனர். இதுவரை 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்களிடம் விசா ரிக்க வேண்டியுள்ளது" என்று வாதாடினார். லட்சம் பணியிடங்களை தேர்வு எஸ்சிஆம் உள்ளதுலட்சம் தப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை கேட்டு வழக்கு தொடர்ந்த கதிரேசனின் வக்கீல் ஆஜராகி, “சிபிஐ போலீசாருக்கு கோர்ட்டு அளித்த காலக்கெடு முடிந்து 6 மாதத்திற்கு மேல் ஆகிவிட்டது. இந்த சம்பவத்தை விசாரிக்கும் ஒரு நபர் கமிஷனை போலவே துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் என்ன? என்ற கோணத்திலேயே சிபிஐயும் விசாரணை செய்து வருகிறதுஇந்த சம்பவத்தில் 13 பேர் பலியானது தொடர்பாக இதுவரை கொலை வழக்கு பதிவு செய்யப்படவில்லை" என்று வாதாடினார். விசாரணை முடிவில், சிபிஐ விசாரணைக்கு கால் அவகாசம் நிர்ணயம் செய்ய முடியாது என ஏற்கனவே பல வழக்குகளில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அதன்படி இந்த வழக்கிலும் விசாரணையை முடிப்பதற்கு கால அவகாசம் நிர்ணயம் செய்ய முடியாது. எனவே இந்த வழக்கில் சிபிஐ. தரப்பில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை, விசாரணை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் விசாரணையை வருகிற செப்டம்பர் மாதம் 15-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)