லேப்-டாப் வழங்காததைக் கண்டித்து அமைச்சர்களை மாணவிகள் முற்றுகை
ஸ்ரீ ர ங் க ம் அ ர சு பெண்கள் மேல் நிலை பள்ளியில் லேப்டாப் வழ ங்காததைக் கண்டித்து அமைச்சர்கள் வெல்ல மண்டி நடராஜன், வளர் மதி ஆகியோரை மாண விகள் நேற்று திடீரென முற்றுகையிட்டதால் பர பரப்பு நிலவியது. இந்த ஆண்டு மார்ச் மாதம் மேல் நிலைப் பள்ளி படிப்பை முடித்த மாணவர்களுக்கு இதுவ ரையில் லேப் டாப் வழ ங்கப்படவில்லை . இது தொடர்பாக பல இடங் களிலும் அரசு பள்ளி மாணவ, மாணவியர்கள் மறியல் போராட்டம் நட த்தி வருகின்றனர். இந்த நிலையில் திருச்சி ஸ்ரீரங்கம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் இந்தாண்டு படிக்கும் பிளஸ் 2 மாண வர் களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் நிக ழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கல் ந்து கொண்டு திருச்சி அமைச்சர்கள் வெல்ல மண்டி நடராஜன், வள் பர்மதி ஆகியோர் மாண வர்களுக்கு லேப்டாப் வழங்கினர். அமைச்சர்கள் வந்தி ருக்கும் தகவல் அறிந்து இந்த பள்ளியில் இந்த ஆண்டு பிளஸ் 2 படித்து முடித்த மாணவர்கள் சுமார் 20 பேர் எங்களு க்கு லேப்டாப் வழங்க வில்லை என கேட்டு அமைச்சர்களை முற்று கையிட்டனர். இரண்டு அமைச்ச ர்களும் ஏதோ சாக்கு போக்கு சொல்லியும் மாணவர்கள் விட வி ல்லை. விரைவில் லேப் டாப் வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதி மொழி வழங்கியதன் பின்னர் முற்றுகை வில க்கிக் கொள்ளப்பட்டது. இச்சம்பவம் அப்பகு தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தின் போது திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு மற் றும் அதிகாரிகள் உட னிருந்தது குறிப்பிடத்த க்கது.