பசு பாதுகாப்பு என்ற போர்வையில் அப்பாவிகளை தாக்கினால் 5 ஆண்டுகள் சிறை

ம,பி காங்கிரஸ் அரசு அதிரடி முடிவு போபால், ஜூன். 28- பசு பாதுகாப்பு என்ற போர்வையில் அப்பாவிகளை தாக்கினால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க மத்திய பிரதேச காங்கிரஸ் அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம், பசு பாதுகாப்பு குண்டர்களுக்கு எதிராக சட்டம் இயற்றும் முதல் மாநிலம் என்ற பெருமையை மத்தியப் பிரதேசம் பெற உள்ளது. பசுக்களை பாது காக்கிறோம் என இந்தியாவில் அவ்வப்போது அப்பாவி மக்களை குண்டர்கள் கும்பலாக தாக்கி கொலை செய்யும் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டு, இதுபோன்ற சம்பவங்களை தடுக்க ஒவ்வொரு மாவட்டந்தோறும் சிறப்பு போலீஸ் அதிகாரிகளை நியமிக்க - இந்நிலையில் பசுக்களை பாதுகாக்கிறோம் என அப்பாவிகளை தாக்கினால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் அரசு முடிவு செய்துள்ளது. பசுவதை தடுப்புச்சட்டம் 2004-ல் திருத்தம் கொண்டுவர மத்தியப் பிரதேச மாநில காங்கிரஸ் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான கோப்புகளில் முதல்வர் கமல்நாத் கையெழுத்திட்டுள்ளார். இதனை அம்மாநில கால்நடைத்துறை அமைச்சர் லகான் சிங் யாதவ் உறுதி செய்துள்ளார். ஜூலை 3-ம் தேதி அதிமுக ஆட்சியில் முக்கியத்துவம் கொடுக்காத தான் இன்று தமிழகத்தில் தொடங்கும் மத்திய பிரதேச மாநல் மழைக்கால் கூட : தொடரில் இந்த திருத்தம் கொண்டுவரப்படுகிறது. புதிய சட்டத்திருத்தத்தின்படி, பசுக்களைப் பாதுகாக்கிறோம் என்ற பெயரில் வன்முறையில் ஈ டு ப டு ேவ ா ர் க ளு க் கு குறைந்தபட்சம் 6 மாதம் முதல், 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். ரூ.25 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதமும் விதிக்கப்படும். கும்பலாக வன்முறையில் ஈடுபட்டால் சிறை தண்டனை நீட்டிக்கப்படும். அதிகபட்சமாக 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். தொடர்ந்து இதே போன்ற வன்முறையில் ஈடுபட்டால், தண்டனை இரட்டிப்பாக்கப்படும் என திருத்தம் செய்யப்பட்டுள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்