அரசு மருத்துவமனைக்குள் புகுந்து 4 வயது குழந்தையை தெருநாய்கள் கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

- நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் அரசு மருத்துவமனைக்குள் புகுந்து 4 வயது குழந்தையை தெருநாய்கள் கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பரமத்திவேலூர் அரசு மருத்துவமனையில் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த ஹரிஹரன் - யோகேஸ்வரியின் தம்பதியின் 4 வயது குழந்தை உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் மருத்துவமனை வளாகத்தில் சுற்றித்திரிந்த 5க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் திடீரென மருத்துவமனைக்குள் நுழைந்து சிகிச்சை பெற்று வந்த குழந்தையை கடித்து குதறியுள்ளது. அருகில் இருந்தவர்கள் சுதாரித்து நாய்களை விரட்டி குழந்தையை காப்பாற்றினர். இதுகுறித்து மருத்துவர்களுக்கு தகவல் கொடுத்தும், 2 மணி நேரமாக சிகிச்சை அளிக்க வராதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த மருத்துவ அலுவலர் சாந்தி, மருத்துவர்களை கண்டித்தார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெறும் பரபரப்பு ஏற்பட்டது


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)