ஈரான் மீது மேலும் பெரிய தடை: ட்ரம்ப் எச்சரிக்கை!

ஈரான் மீது மேலும் பாரிய தடைகளை விதிக்கவுள்ளதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறித்துக்) கொண்ட அமெரிக்கா, ஈரானுடன் கடும் மோதல் போக்கை ) கடைபிடித்து வருகிறது. இதனால் ஈரானுக்கு எதிராக கடுமையான பொருளாதார தடைகளையும் அமெரிக்கா விதித்துள்ளது. ஈரானும் அமெரிக்காவின் மிரட்டலுக்கு அஞ்ச மாட்டோம் என்று பதிலடி கொடுத்து வருகிறது. அண்மையில் ஓமன் வளைகுடாவில் எண்ணெய் கப்பல்கள் மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலுக்கு ஈரானும், அமெரிக்காவும் ஒருவர் | மீது ஒருவர் குற்றம் சுமத்தியிருந்தனர். இதற்கிடையே) ஈரானின் தெற்கு பகுதியிலுள்ள ஹோர்மஸ்கான் என்ற பிராந்தியத்திற்குள் வந்த அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஈரான் தெரிவித்தது. | இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த அமெரிக்கா, ஈரான் உளவு விமானம் சர்வதேச எல்லையில்தான் பறந்தது. அதை வேண்டுமென்றே ஈரான் சுட்டு வீழ்த்தியதாக குற்றம் சுமத்தியது. இந்த நிலையிலேயே அணுவாயுதங்களைப் பெறு வதில் ஈரானைத் தடுக்கும் வகையில் இந்தத் தடைகள் அமுல்படுத்தப் படவுள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் குறிப் பிட்டுள்ளார். ஈரான் தமது அணுவாயுதங்கள் தொடர்பான திட்டங்களைக் கைவிடும் வரை யில் அதன் மீதான பொரு ளாதார அழுத்தங்கள் தொடர்ந்து கொண்டேயிருக்கும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். இதற்காகவே மேலதிகத் தடைகள் விதிக்கப்படுவ தாகவும் சில விடயங்கள் காரணமாக அதனை மிக விரைவாக முன்னகர்த்த வுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். | சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட அளவிற்கு தமது அணுவாயுதத் திட்டங்களை விரிவுபடுத்தவுள்ளதாக ஈரான் ட்ரம்ப் இந்த மேலதிகத் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)