கொள்ளையர் 10 பேர் கைது : 12 மணி நேரத்துக்குள் பிடிபட்டனர்
குற்றவாளிகளான யமகா ராகுல், பரத்குமார் ஆகிய இருவரையும் 12 மணி நேரத்துக்குள் கைது செய்தனர். இவர்கள் வழிப்பறி செய்த பொருட்களைப் பதுக்கி வைத்திருந்த கூட்டாளிகளான தனுஷ், சூர்யா, ராகேஷ், ராகுல், கார்த்திக், விஜய் மணிகண்டன், மணி, சஞ்சய் ஆகியோரையும் நேற்று மாலைக்குள் அடுத்தடுத்துக் கைது செய்தனர். கொள்ளையர்களிடம் இருந்து 5 இருசக்கர வாகனங்கள், 11 செல்போன்கள், தங்க நகைகள் உள்ளிட்ட பொருட்களைக் காவல்துறையினர் மீட்டனர். வழிப்பறிக் கொள்ளைகள் நிகழ்ந்து 12 மணி நேரத்துக்குள் குற்றவாளிகளைக் கைது செய்து சிறைக்கு அனுப்பிய தனிப்படையினரைக் காவல் ஆணையர் நேரில் அழைத்துப் பாராட்டினார்.