பணம் வராததால் கோபத்தில் ஏடிஎம் மெஷினை உடைத்த இளைஞர்..

சென்னையின் சோழிங்கநல்லூர் அருகே பணம் வராத ஆத்திரத்தில் ஏடிஎம் மிஷினை உடைத்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.


 


சோழிங்கநல்லூர் அருகேயுள்ள செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு காலனியில் இரண்டு தனியார் வங்கியின் ஏடிஎம் மையங்கள் உள்ளது. இதில் உள்ள இரண்டு மிஷின்களும் உடைக்கப்பட்டு இருப்பதாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீசார் ஏடிஎம் மையத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.


இதில் அந்தப்பகுதியில் கட்டிடவேலை செய்துவரும் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த வடமாநில இளைஞர் புருஷோட்டம் பாண்டே என்பது தெரிய வந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில், இரு ஏடிஎம் மிஷின்களிலும் பணம் வராததால் அதனை உடைத்து பணத்தை எடுக்க முயற்சி செய்ததாக தெரிவித்தார்.


 


இதனைத் தொடர்ந்துபுருஷோட்டம் பாண்டேவை கைது செய்த காவல்துறையினர் அவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்