தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பொறுப்பற்ற அலட்சியத்தால் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு தமிழக அரசு வழங்க வேண்டும்

சென்னை மாநகராட்சி- தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பொறுப்பற்ற அலட்சியத்தால் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு தமிழக அரசு வழங்க வேண்டும்* சென்னை மாநகராட்சி மற்றும் மின்வாரிய அலட்சியத்தால், சாலையில் அறுந்து கிடந்த மின்சார ஒயரை மழைநீரில் தெரியாமல் மிதித்து உயிரிழந்த பெண்மணி* *அலீமா குடும்பத்துக்கு 50 லட்சம் ரூபாய் இழப்பீடு தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும்* *சென்னை திருவிக நகர் புளியந்தோப்பு பெரியார் நகர் ஹவுசிங்போர்டில் வசித்துவரும் சேக் இப்ராஹீம் மனைவி அலிமா (வயது 45) இவர்களுக்கு ஒரு மகன் உள்ளான்.* *சென்னையில் நேற்று (செப்டம்பர் 14/2020) முன்தினம் முதல் மழை பெய்து கொண்டே இருந்ததால், *பெரியார் நகர் தெருக்களில் மழைநீர் தேங்கி நின்றது. அந்த பகுதியில் சாலையோரம் நிலத்திற்கு அடியில் சென்று கொண்டிருந்த மின்சார வயர், வெளியே தெரியும்படி இருந்தது*. *நேற்று வீட்டு வேலை செய்வதற்காக சென்னை நாராயணசாமி தெருவில் நடந்து சென்ற அலிமா, மழைநீரில் தெரியாமல் மின்சார வயரை மிதித்து விட்டார்* *இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே அவர் கீழே விழுந்து இறந்தார்*. *இதை தாமாக முன் வந்து வழக்குப் பதிவு செய்த மாநில மனித உரிமை ஆணையம், இதுகுறித்து விளக்கமளிக்க சென்னை மாநகராட்சி ஆணையர், மின்சார வாரியத் தலைவர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியது.* இதையடுத்து, கோட்ட *உதவி மின் பொறியாளர் கண்ணன், இளநிலை பொறியாளர் வெங்கட ராமன் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.* அலிமாவின் உயிர் அநியாயமாகபோக காரணமான சம்பந்தப்பட்ட அரசு ஊழியர்கள், தங்களது குடும்பத்தினரை இப்படி சாகாமல் பாதுகாப்பதுடன் , பரிதாபமாக உயிரிழந்த அல்மாவின் குடும்பத்துக்கு தமிழக அரசு உடனடியாக ரூ 50 லட்ச ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)