புதிய நாடாளுமன்றக் கட்டிடம் கட்டும் பணி ஒப்பந்தத்தைப் பெற்றது டாட்டா நிறுவனம்

புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை 862 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டுவதற்கான பணி ஒப்பந்தத்தை டாட்டா நிறுவனம் பெற்றுள்ளது.


டெல்லியில் சவுத் பிளாக்கிற்கு அருகே சென்ட்ரல் விஸ்டா என அழைக்கப்படும் பகுதியில் புதிய நாடாளுமன்றக் கட்டிடம், அரசு துறைகளுக்கான 8 கட்டிடங்கள், அலுவலர்களுக்கான குடியிருப்புகளை கட்டத் திட்டமிடப்பட்டுள்ளது.


தரைத்தளம் மற்றும் இரண்டு மாடிகளுடன் முக்கோண வடிவில் கட்டப்பட உள்ள நாடாளுமன்றக் கட்டிடத்தின் மேற்பகுதியில் அசோகச் சின்னம் நிறுவப்பட உள்ளது.


இந்தப் பணி ஒப்பந்தத்தைப் பெற 7 நிறுவனங்கள் விண்ணப்பித்ததில் நிதி முறையிலான டெண்டருக்கு டாட்டா, எல் அண்டு டி, சபூர்ஜி பலோன்ஜி கம்பெனி ஆகிய 3 நிறுவனங்கள் தகுதிபெற்றன. அவற்றின் விண்ணப்பங்களை மத்தியப் பொதுப்பணித் துறை இன்று பிரித்துப் பார்த்தது.


அதில் 861 கோடியே 90 லட்ச ரூபாய்க்கு ஏலம் கேட்டிருந்த டாட்டா நிறுவனத்துக்குக் கட்டிடப் பணிக்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டது. எல் அண்டு டி நிறுவனம் 865 கோடி ரூபாய்க்குப் பணி ஒப்பந்தத்தைக் கேட்டிருந்தது.


நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடர் முடிவுற்றதும் புதிய நாடாளுமன்றத்திற்கான கட்டுமானப்பணிகள் தொடங்கும் எனக் கூறப்படுகிறது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)