இ-பாஸ் நடைமுறை இனியும் தேவையற்றது-மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை இனியும் தேவையற்றது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், தொடர்ந்து நீடிக்கும் இ-பாஸ் நடைமுறையால் சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள், பணிபுரிந்த, தொழில் நடத்திவரும் ஊர்களுக்கு திரும்ப முடியாத சூழல் நிலவுவதாக குறிப்பிட்டுள்ளார்.


துதளர்வுகளின் அடிப்படை நோக்கத்தையே அடியோடு சீரழிக்கும் அடாவடிச் செயல் எனவும் கூறியுள்ளார். அவசரங்களுக்கு விண்ணப்பிக்கும் இ-பாஸ் பொருந்தாத காரணங்களைச் சொல்லி பலமுறை நிராகரிக்கப்பட்டு விடுவதாகவும், பத்து முறை விண்ணப்பித்தாலும் நேர்மையான முறையில் பாஸ் கிடைப்பதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.


மேலும் இ-பாஸ் குறித்த முறைகேடுகள் அதிகரித்து விட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ள ஸ்டாலின், 'செயற்கையான' தடையை ஏற்படுத்தி இன்னல்படுத்திட வேண்டாம் என்றும், எனவே இ-பாஸ் முறையை உடனே ரத்து செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!