தீக்குளித்த பெயின்டர் பலி - இன்ஸ்பெக்டர் சஸ்பென்ட்

சென்னை அடுத்த புழலில் வாடகைதாரர் - வீட்டு உரிமையாளர் பிரச்சனையில் தலையிட்ட காவல் ஆய்வாளர், வாடகைதாரரை குடும்பத்தினர் முன்னிலையில் தாக்கினார்.


இதனால் மனமுடைந்த வாடகைதாரர் தீக்குளித்து உயிரை விட்ட நிலையில், அத்துமீறிய ஆய்வாளர் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார்.


சென்னை அடுத்த புழல் விநாயகபுரத்தை சேர்ந்த (அதிமுக பிரமுகரான) ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் ஓட்டேரியை சேர்ந்த பெயிண்டர் சீனிவாசன் என்பவர் வாடகைக்கு குடியிருந்து வருகிறார்.


ஊரடங்கால் வருமானம் இல்லாமல், சில மாதங்களாக வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் இருந்துள்ளார். வீட்டை காலி செய்யுமாறு கூறியதையும், சீனிவாசன் ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது.


இந்த நிலையில், ராஜேந்திரனின் தூண்டுதலின் பேரில், சீனிவாசன் குடியிருந்த வீட்டிற்கு சென்ற புழல் காவல் நிலைய ஆய்வாளர் சாம் பென்ஷாம், மனைவி மற்றும் குழந்தைகள் முன்னிலையில் அவரை அடித்து, காலையில் காவல் நிலையம் வருமாறு கூறிவிட்டு சென்றதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த சீனிவாசன் நள்ளிரவில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதாக சொல்லப்படுகிறது.


சீனிவாசனின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


85% தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பெயின்டர் சீனிவாசன் குடிபோதையில் தகராறு செய்ததாக வந்த புகாரின் பேரில் விசாரணை நடத்தியதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.


ஆனால், ஆய்வாளரே ஏன் நேரில் சென்றார் என உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தும் நிலையில், ஆய்வாளர் சாம் பென்ஷாம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.


ஊரடங்கு காலத்தில் வருமானம் இல்லாமல் இருப்பதால், வாடகை கேட்டு வற்புறுத்த கூடாது என அரசு அறிவுறுத்தியுள்ளது.


அப்படியான சூழலில் பாதிக்கப்பட்ட சீனிவாசன் தரப்பை விசாரிக்கமால், நேர்மாறாக நடந்த விசாரணை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வீட்டின் உரிமையாளர் அதிமுகவைச் சேர்ந்தவர் எனச் சொல்லப்படுகிறது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!