அனைவருக்கும் 'இ-பாஸ்' -புதிய தளர்வு அறிவிப்பு

கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் பொது முடக்கம் அமலில் உள்ள நிலையில் இ-பாஸ் நடைமுறை அமலில் உள்ளது.


ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு அல்லது பிற மாநிலங்களுக்கும் செல்வதற்கு இ-பாஸ் பெற வேண்டும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.


ஆனால் எதிர்க்கட்சியான திமுக மற்றும் பாஜக சார்பில் கூட இந்த இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்யக்கோரி தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. அண்மையில் இ-பாஸ் முறையை எளிமைப்படுத்த


இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். இந்நிலையில் தற்பொழுது விண்ணப்பித்த அனைவருக்குமே இ-பாஸ் கிடைக்கும்.


ஆதார் அல்லது ரேஷன், அட்டை நகல், தொலைபேசி எண்ணுடன் விண்ணப்பித்தால் இ-பாஸ் வழங்கப்படும் என இ-பாஸ் நடைமுறையில் தளர்வுகளை தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். தவிர்க்க இயலாத பணிகளுக்கு மட்டுமே இ-பாஸ் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.


திருமணம், இறப்பு, மருத்துவ சிகிச்சைகளுக்கு மட்டுமே இ-பாஸ் என்ற கட்டுப்பாடு தற்பொழுது தளர்த்தப்பட்டுள்ளது.


புதிய இ-பாஸ் நடைமுறை வருகின்ற 17 ம் தேதி முதல் அமலுக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)