மாவட்ட எல்லைகளைக் கடக்க இ-பாஸ் கட்டாயம் தேவை: போலீஸார் அறிவிப்பு

மாவட்ட எல்லைகளை கடந்து செல்ல இ-பாஸ் கட்டாயம் தேவைஎன்று போலீஸார் தெரிவித்துள் ளனர். கரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் பொது போக்குவரத்துக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.


திருமணம், மருத்துவம், இறப்பு ஆகிய 3 காரணங்களுக்காகவும் சில தவிர்க்க முடியாத காரணங்களுக்கும் இ-பாஸ் வழங்கப்படுகிறது. இதற்கிடையே இ-பாஸ் நடைமுறைக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், நாளை (17-ம் தேதி) முதல் இ-பாஸ் கேட்டு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் பாஸ்வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார். அதைத் தொடர்ந்து பலர் இ-பாஸ் இல்லாமல் மாவட்ட எல்லைகளை கடந்து செல்ல முற்பட்டனர்.


மாவட்ட எல்லைகளில் சோதனை நடத்தி வரும் போலீஸார், இ-பாஸ் இல்லாமல் வருபவர்களை தடுத்து நிறுத்திதிருப்பி அனுப்பி வருகின்றனர். ‘‘இ-பாஸ்-க்கு விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும் என்றுதான் முதல்வர் கூறியிருக்கிறார். இ-பாஸ் இல்லாமல் செல்லலாம் என்று கூறவில்லை.


எனவே, சாலைகளில் வாகனங்களில் மாவட்ட எல்லைகளை கடந்து செல்ல நினைப்பவர்கள் கட்டாயம் இ-பாஸ் வைத்திருக்க வேண்டும். அப்படி இல்லாமல் போலீஸாரிடம் வாக்குவாதம் செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று போலீஸார் எச்சரித்துள்ளனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)