ஊழல் வழக்கில் மலேசியா முன்னாள் பிரதமருக்கு 12 ஆண்டு சிறை

சுமார் 7400 கோடி ரூபாய் அரசு பணத்தை கையாடல் செய்ததாக குற்றஞ்சாட்டி நடத்தப்பட்ட வழக்குகளில், முதல் வழக்கில் மலேசியா முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கிற்கு 12 ஆண்டுகால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


எனினும் மேல் முறையீடு செய்வதற்கு காலவகாசம் அளிக்கும் வகையில் அவர் உடனடியாக கைது செய்யப்படவில்லை. 7 குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நடந்த விசாரணையின் முடிவில் இந்த தீர்ப்பு அளிக்கப்ப்ட்டுள்ளது.


தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்து தாம் குற்றமற்றவர் என நிரூபிக்க உள்ளதாக நஜீப் ரசாக் கூறியுள்ளார். மலேசியாவின் வரலாற்றில் ஊழலுக்காக ஒரு தலைவருக்கு தண்டனை விதிக்கப்படுவது இதுவே முதல் தடவை.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!