சென்னையில் மேலும் 90 மருத்துவர்கள், செவிலியர்களுக்கு கொரோனா

சென்னையில் இன்று மேலும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட 90 மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.


சென்னையில் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் கொரோனா பாதித்தோர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்.


அவர்களுக்கு ஏராளமான மருத்துவர்கள், செவிலியர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.


அதுபோல சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு நாள்தோறும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது.


இந்நிலையில் ஸ்டான்லி மருத்துவமனை, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, ஓமந்தூரர் மற்றும் எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனைகளை சேர்ந்த மேலும் 90 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், செவிலியர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.


இதையடுத்து அவர்கள் தனிமைபடுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Popular posts from this blog

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு