நகைக்கடை கொள்ளையில் தப்பி ஓடிய மற்றொரு கொள்ளையன் கைது

திருச்சி நகைக்கடை கொள்ளை சம்பவத்தில் தேடப்பட்ட வந்த கொள்ளைன் சுரேஷ் திருவாரூரில் கைது செய்யப்பட்டுள்ளார். நகைக்கடை கொள்ளை சம்பவம் தொடர்பாக, காவல்துறையினர் 7 தனிப்படைகள் அமைத்துக் கொள்ளையர்களைத் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்த நிலையில், திருவாரூர் மாவட்டம் மடப்புரத்தில் காவல்துறையினர் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த போது, மணிகண்டன் என்ற கொள்ளையன் பிடிப்பட்டார். மணிகண்டனுடன் வந்த சுரேஷ் என்ற கொள்ளையன் தப்பி ஓடிவிட்டார். மணிகண்டனிடம் தீவிர விசாரணை நடத்திய காவல்துறையினர், தப்பி ஓடிய கொள்ளையன் சுரேஷ் குறித்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில், திருவாரூரில் பதுங்கியிருந்த சுரேஷ் மற்றும் அவரது உறவினர்கள் 2 பேரை காவல் துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்