பிகில் படத்திற்குத் தடை விதிக்க கோரிய வழக்கு இன்று விசாரணை

விஜய் நடித்துள்ள பிகில் படத்துக்கு தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. நடிகர் விஜய், நயன்தாரா நடிப்பில், ஏ.ஆர் ரஹ்மான் இசையில், பெண்கள் கால் பந்தாட்டத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள பிகில் படத்தை அட்லீ இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் கதை தனக்குச் சொந்தமாது எனவும், அதைத் தென்னிந்திய எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்துள்ளதாகவும் உதவி இயக்குநரான செல்வா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும், பிகில் படத்தைத் திரையிடுவதற்குத் தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார் வழக்குத் தொடர்பான ஆவணங்களைத் தாக்கல் செய்யுமாறு அட்லீ மற்றும் ஏஜிஎஸ் நிறுவனம் ஆகியோருக்கு உத்தரவிட்டார். இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்