முதலமைச்சர் சார்பில் அவதூறு வழக்கு தொடர அரசு வக்கீல்களுக்கு அதிகாரம் உள்ளதா?

அரசியல் கட்சி தலைவர்களுக்கு எதிராக முதலமைச்சர், அமைச்சர்கள் சார்பில் அவதூறு வழக்கு தொடர அரசு வழக்கறிஞர்களுக்கு அதிகாரம் உள்ளதா என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை விமர்சித்ததாக திமுக தலைவர் ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தேமுதிக தலைவர் விஜயகாந்த், பொருளாளர் பிரேமலதா உள்ளிட்டோருக்கு எதிராக தமிழக அரசு குற்றவியல் வழக்கறிஞர்களால் தமிழகத்தின் பல்வேறு மாவட்ட அமர்வு நீதிமன்றங்களில் அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன. பின்னர் அந்த வழக்குகள் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில் அவதூறு வழக்குகளை ரத்து செய்யக்கோரி அரசியல்கட்சித் தலைவர்கள் மனுதாக்கல் செய்திருந்தனர். அமைச்சர்கள் என்ற முறையில் இல்லாமல், தனிப்பட்ட முறையில் விமர்சித்ததற்காக அரசு தரப்பில் அவதூறு வழக்கு தொடர அரசு குற்றவியல் வழக்கறிஞருக்கு அதிகாரம் இல்லை என மனுக்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனுக்கள் நீதிபதி பி.டி.ஆதிகேசவலு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசியல் தலைவர்கள் கூறியுள்ள காரணத்தின்படி அவதூறு வழக்குகளை தாக்கல் செய்ய அரசு வழக்கறிஞருக்கு அதிகாரம் உள்ளதா, இல்லையா என்பது குறித்து தமிழக அரசு 2 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பர் 23ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்