சென்னை அமிர்தா ஹோட்டல் மேனேஜ்மன்ட் கல்லூரி முன்னாள் பேராசிரியர் வேலை வாங்கி தருவதாக மோசடி

சென்னை அமிர்தா ஹோட்டல் மேனேஜ்மண்ட் கல்லூரியின் முன்னாள் பேராசிரியர் ஒருவர் ஆஸ்திரேலியாவில் வேலை வாங்கித் தருவதாக 70 லட்சம் ரூபாய் மோசடி செய்துவிட்டதாக, பாதிக்கப்பட்டவர்கள் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் இன்று புகார் அளித்தனர். இக்கல்லூரியில் கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ்வரன் என்பவர் கடந்த 2016ஆம் ஆண்டில் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படித்துள்ளார். அப்போது, பேராசிரியராக பணிபுரிந்த ரமேஷ்பாபு, ஆஸ்திரேலியாவில் வேலை வாங்கி தருவதாக 30 மாணவர்களிடம் தலா 2 லட்சம் ரூபாய் முதல் 3 லட்சம் ரூபாய் வரை வாங்கியுள்ளார். ஆனால், மாணவர்கள் 2016ஆம் ஆண்டில் படிப்பை முடித்த பிறகும் அவர் வேலை வாங்கித் தரவில்லை. இதனால் மாணவர்கள் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்தனர். இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் அவர்களுக்கு வேலை வாங்கித் தந்தது போன்ற பணி சேர்ப்பு கடிதத்தை ((ஆஃபர் கடிதம்)) அவர் கொடுத்துள்ளார். இதை மாணவர்கள் ஆய்வு செய்தபோது, போலியானது என்பது தெரிந்தது. இதைத் தொடர்ந்து, ரமேஷ்பாபுவிடம் பணம் கேட்டு மாணவர்கள் நிர்ப்பந்தம் அளித்தனர். எனவே வேலையை விட்டுவிட்டு, தனது குடும்பத்துடன் அவர் தலைமறைவாகி விட்டார். இதையடுத்து சென்னை வந்து காவல்துறையிடம் மாணவர்கள் புகார் அளித்தனர். இருப்பினும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் ரமேஷ்பாபுவின் மோசடியை அம்பலப்படுத்தும் வகையில், பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் மாணவர்கள் பதிவுகளை வெளியிட்டனர். இந்தப் பதிவுகளை பார்த்துவிட்டு உத்தரப் பிரதேசத்தில் இருந்து சிலர் மாணவர்களைத் தொடர்பு கொண்டு, ரமேஷ்பாபு தங்களது பகுதியில் வேலை பார்ப்பதாக தெரிவித்துள்ளனர். இருப்பினும் உத்தரப் பிரதேசத்துக்கு மாணவர்களால் செல்ல முடியாத காரணத்தால், தங்களிடமுள்ள ஆதாரத்துடன் கோவை காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமாரிடம் பாதிக்கப்பட்ட மாணவர்களில் 6 பேர் புகார் அளித்தனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்