குடிபோதையில் காவல்துறையினரை தவறாக வீடியோ எடுத்து முகநூலில் வெளியிட முயன்ற இருவர் மீது போலீசார் வழக்கு பதிவு

தருமபுரியில் குடிபோதையில் காவல்துறையினரை தவறாக வீடியோ எடுத்து முகநூலில் வெளியிட முயன்ற இருவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தருமபுரி நான்கு ரோடு பகுதியில், நகர காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுப்பட்ட போது, அந்த வழியாக குடிபோதையில் வந்த குண்டல்பட்டியை சேர்ந்த சதீஸ்குமாரும், குள்ளனூரை சேர்ந்த விஜயராஜூம், காவலர்களிடம் ரூ.500 கொடுத்து சில்லறை கேட்டுள்ளனர். பணம் கொடுக்கும் போது, அதனை அவர்கள் வீடியோவாகவும் எடுத்துள்ளனர். இதையடுத்து, குடிபோதையில் இருந்த இருவரையும் போலீசார் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்தனர். அப்போது, போலீஸ்காரர்களுக்கு லஞ்சம் கொடுப்பது போல வீடியோ எடுத்தது, சமூகவலைதங்களில் பதிவேற்ற திட்டமிட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல், ஆபாசமாக பேசுதல், தவறான எண்ணத்துடன் அரசு அதிகாரியை வீடியோ எடுத்தல் என மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்