கத்திகளுடன் பதுங்கியிருந்த கஞ்சா விற்பனை கும்பல் கைது

சென்னை தண்டையார்பேட்டை அருகே, கத்திகளுடன் பதுங்கியிருந்த கஞ்சா விற்பனை செய்யும் கும்பலை போலீசார் சுற்றிவளைத்து கைதுசெய்தனர். தண்டையார்பேட்டை, ஆர்.கே நகர் உள்ளிட்ட பகுதிகளில் கத்தியை காட்டி மிரட்டி சிலர் வழிப்பறியில் ஈடுபடுவதாகவும், கஞ்சா விற்கப்படுவதாகவும் கிடைத்த தகவலின் பேரில் போலீசார் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலத்தின் கீழ் கத்திகளுடன் பதுங்கியிருந்த சந்தோஷ், பாஸ்கர், சுரேஷ், நாகராஜ், சரவணன், விக்கி மற்றும் ஸ்ரீதர் ஆகிய 7 பேரை போலீசார் கைதுசெய்தனர். இவர்களில் சந்தோஷ் மற்றும் பாஸ்கர் மீது ஏற்கெனவே கொலை வழக்குகள் இருப்பதாக கூறப்படும் நிலையில், கைது செய்யப்பட்ட நபர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ஆந்திராவிலிருந்து ரயில் மூலம் கஞ்சாவை கடத்திவந்து, சிறு சிறு பொட்டலங்களாக போட்டு, தண்டையார்பேட்டை ஆர் கே. நகர் உள்ளிட்ட பகுதிகளில் இக்கும்பல் விற்பனை செய்துவந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடமிருந்து இரண்டு கத்திகள் மற்றும் ஒரு கிலோ கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்