மதுரை மத்திய சிறையில், சிறை காவலர்கள், காவல் துறையினர் அதிரடி சோதனை

சிறை காவலர்களும், காவல் துறையினரும் கூட்டாக இனைந்து மதுரை மத்திய சிறையில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். மதுரை சரக சிறைத்துறை துணை தலைவர் பழனி தலைமையில் கண்காணிப்பாளர் ஊர்மிளா முன்னிலையில் சோதனை நடைபெற்றது. கைதிகள் மற்றும் அவர்களது அறைகளில் தீவிரமாக சோதனையிடப்பட்டது. திலகர் திடல் காவல் உதவி ஆணையர் வெற்றிச்செல்வன் உள்ளிட்ட ஆண் மற்றும் பெண் காவலர்கள் என 100க்கும் மேற்பட்டோர் இணைந்து இந்த சோதனையை நடத்தினார்கள். இதே போன்று பெண்கள் தனி சிறையில் பெண் காவலர்கள் சோதனை செய்தனர். இதில் சிறை விதிக்கு புறம்பான தடைசெய்யப்பட்ட பொருட்கள் ஏதும் கைப்பற்றப்படவில்லை என தெரிவித்துள்ளனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்