போலி ஒதுக்கீடு ஆணை மூலம் விற்கப்பட்ட 65 வீடுகள் மீட்பு: அதிகாரிகள் நடவடிக்கை

பெரம்பூர்: காசிமேடு, காசிபுரம், பவர்குப்பம் ஆகிய பகுதிகளில் குடிசை மாற்று வாரியம் சார்பில் புதிதாக 556 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இதில், 300க்கும் மேற்பட்ட வீடுகள் பயனாளிகளுக்கு ஓதுக்கீடு செய்யப்பட்டது. மீதமுள்ள வீடுகளுக்கு அரசியல் கட்சியினர் சிலர் போலி ஒதுக்கீடு ஆணை தயாரித்து, அபகரித்துள்ளதாக அதிகாரிகளுக்கு புகார் வந்தது. அதன்பேரில், அதிகாரிகள் கடந்த வாரம் நேரில் ஆய்வு செய்த போது, 65 வீடுகளுக்கு போலி ஆணை தயாரித்து, பலருக்கு விற்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, போலி ஆணை பெற்று குடியிருந்தவர்களை காலி செய்ய உத்தரவிட்டனர். ஆனால் அவர்கள் காலி செய்யவில்லை. இந்நிலையில் நேற்று காலை குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் செந்தில் ஜெயக்குமார், வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சுப்புலட்சுமி மற்றும் 100க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஆக்கிரமிப்பு செய்த வீடுகளில் இருந்த பூட்டுகளை அப்புறப்படுத்தினர். இதனால் போலி ஆவணம் மூலம் வீடு வாங்கியவர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதிகாரிகள் அவர்களிடம் விளக்கி கூறி, வீடுகளை காலி செய்தனர். பின்னர் வீடுகளுக்கு பூட்டு போட்டனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்