மாடு கடத்த வந்ததாக கூறி, இளைஞர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு

உத்தரப்பிரதேச மாநிலம் ஹார்டோய் என்ற இடத்தில் மாடு கடத்த வந்ததாக கூறி, இளைஞர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் பசுக்கள் கடத்தப்படுவதை தடுக்க, பசு கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஹார்டோய் என்ற இடத்தில் உள்ள தோட்டத்தில் ஏராளமான மாடுகள் கட்டப்பட்டிருந்தன. அவற்றை, இளைஞர்கள் சிலர் கடத்த முயன்றதாக கூறப்படுகிறது. இதனையறிந்து, அங்கு சென்ற பசு கண்காணிப்பு குழுவினரும், போலீசாரும் இணைந்து, இளைஞர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 2 பேர் காயம் அடைந்தனர். மேலும் பலர் தப்பியோடிவிட்டனர். இந்த சம்பவத்தில் காயமடைந்த 2 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், இந்த சம்பவத்தில், காவலர் ஒருவரும் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்