ரயில்களில் துப்புரவு பணிகள் தொடரும் -ரயில்வே அமைச்சகம்

தெற்கு ரயில்வேக்கு கீழ் இயக்கப்படும் அனைத்து ரயில்களிலும் துப்புரவு பணிகள் வழக்கம் போல தொடர்ந்து நடைபெறும என அறிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வேக்கு கீழ் இயங்கும் ரயில்களில் பயோ கழிப்பறையைத் தூய்மைப்படுத்துதல், பூச்சிகள் வராமல் கட்டுப்படுத்துதல், லினன் போர்வை உறைகளை மாற்றி தூய்மைப்படுத்தல் ஆகிய பணிகளை துப்புரவு ஒப்பந்ததாரர்கள் மேற்கொண்டு வருகின்றனர். அவர்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் நிலுவை தொகை இருப்பதாகவும், அதற்கு உடனடியாக நிதி ஒதுக்குமாறும் தெற்கு ரயில்வே சார்பில் ரயில்வே அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால் அதற்கு ரயில்வே அமைச்சகம் எந்த பதிலும் அளிக்காத நிலையில், நிதி பற்றாக்குறை காரணமாக தெற்கு ரயில்வேக்கு கீழ் இயக்கப்படும் தொலைதூர ரயில்களை தவிர்த்து 86 ரயில்களில் துப்புரவு பணிகள் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் நிறுத்தப்படுவதாக தெற்கு ரயில்வே கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி அறிவித்திருந்தது. இந்நிலையில் கிட்டத்தட்ட 50 கோடி ரூபாய் நிலுவைத்தொகையை செலுத்த ரயில்வே அமைச்சகம் கடைசி நேரத்தில் ஒப்புதல் வழங்கி உள்ளதால், வழக்கம் போல தெற்கு ரயில்வேக்கு கீழ் இயங்கும் 110 ரயில்களிலும் துப்புரவு பணிகள் தொடர்ந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்