குற்றாலத்தில் அலைமோதும் சுற்றுலா பயணிகள் கூட்டம்

குற்றால அருவிகளில் இதமான சீசனால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் மழையால் குற்றாலத்தில், மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவி, உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. இன்றும் சீரான நீர்வரத்தால் இதமான சீசன் நீடிப்பதால், சுற்றுலாப்பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில் சுற்றுலாப்பயணிகள் தங்கநகை அணிந்து குளிக்க வேண்டாம் என காவல்துறையினர் ஒலிபெருக்கியில் எச்சரித்து வரும் நிலையில், இன்று மெயினருவியில் குளித்த சுற்றுலாப்பயணி ஒருவரின் 3 சவரன் தங்கச்சங்கிலி, நீரில் அடித்து செல்லப்பட்டு தடாகத்தில் விழுந்தது. இதுகுறித்து அவர் போலீசில் புகார் செய்துள்ளார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்