சாமி சிலைக்கு செருப்பு மாலை அணிவித்த மர்ம நபர்கள்...!

தருமபுரி அருகே சாமி சிலைக்கு செருப்பு மாலை அணிவித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்துள்ள கூத்தப்பாடி கிராமத்தில் பழமைவாய்ந்த முனியப்பன் சுவாமி கோயில் உள்ளது. சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் முனியப்பன் சுவாமியை தங்கள் குல தெய்வமாக வழிபட்டு வருகின்றனர். வருடந்தோறும் மழை பெய்ய வேண்டி 2 ஆயிரம் களி உருண்டைகள் படையலிட்டு முனியப்பன் சுவாமியை பொதுமக்கள் வழிபடுவது வழக்கம். அந்த வகையில் இன்று அந்த வழிபாடு நிகழ்ச்சி நடக்க இருந்த நிலையில் மர்ம நபர்கள் சிலர் முனியப்பன் சுவாமிக்கு பட்டை நாமம் பூசியதோடு செருப்பு மாலை அணிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஏரியூர் - பென்னாகரம் சாலையில் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்