மடிக்கணினி வழங்க கோரி மாணவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா சுந்தரராஜபுரம் மாநகராட்சி பள்ளியில் மாணவ மாணவியருக்கு இன்னும் விலையில்லா மடிக்கணினி வழங்கப்படவில்லை.இது குறித்து ஆகஸ்ட் 20 அன்று மாணவர்கள் சிலர் பள்ளியின் தலைமையாசிரியர் அலுவலகத்திற்கு சென்றுள்ளனர்.ஆனால் அவர்களை உள்ளே அனுமதிக்காமல் காவல்துறை ஆய்வாளரை அழைத்து வந்து மாணவர்களை மிரட்டியுள்ளனர்.ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் கூட்டுறவுத்துறை அமைச்சர் தலைமையில் மதுரை மாநகராட்சி பள்ளியில் பயிலும் அனைத்து 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டது.ஆனால் இங்கு தலைமையாசிரியர் எங்களுக்கு மடிக்கணினி வழங்க சொல்லி தமிழக அரசிடமிருந்து எந்த உத்தரவும் வரவில்லை என்று கூறியுள்ளார்.அதனால் உடனே தங்களுக்கு அரசு வழங்கிய விலையில்லா மடிக்கணினியை வழங்கிட கோரி மாணவர்கள் மனு அளித்தனர். 2 Attachments


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்