விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பட்டாசு வெடிக்கக் கூடாது - போலீசார் கட்டுப்பாடு

நாடு முழுவதும் வருகிற 2-ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கடைபிடிக்க வேண்டிய அறிவுரைகள் மற்றும் கட்டுப்பாடுகளை போலீசார் கூறி உள்ளனர். இதுதொடர்பான ஆலோசனை கூட்டம், பேரையூர் போலீஸ் நிலையத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு மதியழகன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் இன்ஸ்பெக்டர் செல்வகுமாரி முன்னிலை வகித்தார். சப்-இன்ஸ்பெக்டர்கள் மகேந்திரன், வீரசோலை, பால்சாமி உள்பட போலீசார் கலந்துகொண்டனர். மேலும் பேரையூர், சாப்டூர், அத்திப்பட்டி, குமராபுரம், தும்மநாயக்கன்பட்டி, மங்கள்ரேவ், வண்டாரி, வண்டபுலி, பழையூர் உள்பட பல்வேறு கிராமங்களில் உள்ள விநாயகர் சிலை அமைப்பு குழுவினரும் கூட்டத்தில் கலந்துகொண்டனர். கூட்டத்தில் போலீசார் கூறிய அறிவுரைகளை கருத்தில் கொண்டு விவாதம் நடத்தப்பட்டது


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்