வெப்பச் சலனம் காரணமாக சென்னையில் மழை..!

வெப்பச்சலனம் காரணமாக சென்னையில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. சென்னையில் மாலை 6மணி முதல் வானம் கருமேகங்கள் சூழ்ந்து காணப்பட்டது. மாலை 6.30மணி அளவில் சென்னை மெரினா கடற்கரை பகுதியில் கருமேகம் கடலில் கலப்பது போன்று மேகங்கள் சூழ்ந்து காணப்பட்டது. மேகத்திற்கும் கடலுக்கும் நடுவே வானம் வெண்மையாக காட்சி அளித்ததை மெரினா கடற்கரையில் கூடியிருந்த மக்கள் கண்டு ரசித்தனர். அடுத்த சில நிமிடங்களில் மெரினா கடற்கரை பகுதியில் சிறிது நேரம் காற்றுடன் கூடிய கன மழை பெய்தது. சென்னையை பொறுத்தவரையில், மீனம்பாக்கம், வேளச்சேரி, ஆதம்பாக்கம், ராமாபுரம், சைதாப்போட்டை, கிண்டி, மைலாபூர், ராயப்பேட்டை, எழுபூர், உள்ளிட்ட பல இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையில் மழை பெய்தது. இரவு நேரத்தில் அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்