Posts

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

Image
  அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் ஏ.எஸ்.பி.யாக இருந்த பல்வீர் சிங், விசாரணை கைதிகளின் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்த சம்பவம் தமிழகத்தில் அதிர்வை ஏற்படுத்தியது. விசாரணைக் கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் ஏ.எஸ்.பி. பல்வீர் சிங் மீது பதிவுச் செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த விவகாரத்தில் பாளையங்கோட்டையைச் சேர்ந்த சுபாஷ் என்பவர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர். அதன்படி இந்திய தண்டனைச் சட்டம் 323, 324, 326, 506(பகுதி 1) ஆகிய பிரிவுகளின் கீழ் ஏ.எஸ்.பி. பல்வீர் சிங் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.அதில் தங்களை ஆடைகள் இல்லாமல் நிற்க வைத்து ஏ.எஸ்.பி. பல்வீர் சிங் மற்றும் சக காவலர்கள் கொடுமையாக தாக்கியதாகவும், வலுக்கட்டாயமாக தங்களது பற்களை பிடுங்கி சித்ரவதை செய்ததாகவும் பாதிக்கப்பட்ட சுபாஷ் தெரிவித்துள்ளார். மேலும் நெல்லை அரசு மருத்துவமனைக்கு தாங்கள் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டு பின்னர் காவல்துறையினர், வழக்கறிஞர்களுடன் பாபநாசம் கொண்டு செல்லப்பட்டதாகவும்

சமூக வலைதள யூடியூபருக்கு, 1 லட்சம் அபராதம் கட்டிய உதவி ஆய்வாளர் இசக்கி ராஜா – மனித உரிமை ஆணையம் உத்தரவு

Image
  கடந்த 2019 ஆம் ஆண்டு மே 15 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காவல் நிலையத்தில் பணியில் இருந்த உதவி காவல் ஆய்வாளர் தனக்கு காவல்துறையில் வழங்கப்பட்ட கை துப்பாக்கியை கையில் வைத்துக் கொண்டு சீருடை அணிந்தும் சீருடை இல்லாமலும் சினிமா ஹீரோ போல போட்டோ சூட் எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்தார். அதுமட்டும் இல்லாமல் தனக்கு தெரிந்த ரௌடிகளை வைத்து முரளி கிருஷ்ணாவை தொலைபேசி மூலம் மிரட்டியும் உள்ளார். ஆகவே இசக்கி ராஜா தான் பிரபலம் ஆக வேண்டும் என நினைத்து அராஜகத்தை கட்டவிழ்த்து விட்டு ரவுடிகள் போல சட்டத்துக்கு புறம்பாக செயல்பட்டு மனித உரிமை மீறலில் செயல்பட்டு வருகிறார் என்றும் இதனால் எனக்கும் என் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத நிலையில் இருப்பதால் எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் மனித உரிமை மீறலில் ஈடுபட்ட இசக்கி ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனித உரிமை ஆணையத்தில் சமூக வலைதள  செய்தி யூடியூப் சேனல் முரளி கிருஷ்ணா புகார் கொடுத்து இருந்தார். மக்களை திசை திருப்பி தற்போது நேர்மையான காவல் அதிகாரியாக திண்டுக்கல் மாவட்டம் பழனியில் வலம்

89 ஆயிரம் பேரிடம் ரூ.4,400 கோடி சுருட்டிய வழக்கு:'ஹிஜாவு' மோசடி நிதி நிறுவன பெண் இயக்குனர் கணவருடன் கைது

Image
  சென்னை அசோக் நகரில் டிராபிக் ஜாம் ஆகும் வகையில் மக்கள் கூட்டம் ஒரு நிதி நிறுவனத்தை ( ஜிஹாவ் ) முற்றுகையிட போலீஸ் குவிக்கப்பட்டது . ஒரு லட்சம் முதலீடு செய்தால் மாதம் 15 ஆயிரம் காலம் முழுவதும் தரப்படும் என்கிற ஆசை வார்த்தையை கூறி கோடிக்கணக்கில் ஜரூராக பணத்தை வசூல் செய்திருக்கிறது ஹிஜாவ் நிதி நிறுவனம். ' சார் நாங்க இருபத்தஞ்சி பேர் குரூப்பா தலா ஒரு லட்சம் வீதம் இருபத்தைந்து லட்சம் போட்டோம் . இரண்டு மாசம் தான் எங்களுக்கு பணம் பதினைந்தாயிரம் வந்தது . கம்பெனி ஆரம்பித்து ஏழு மாசத்துல கடந்த நாலு மாசமாவே பிரச்சினைதான். ஆனாலும் புதிதாக வருபவர்களிடம் பணம் வாங்கிக் கொண்டுதான் இருந்தார்கள் . செக் , ஆன்லைன் மூலமாக இல்லாமல் ரெடி கேஷாக மட்டுமே பணத்தை வாங்கினார்கள். பணம் கொடுத்தற்கான ஆதாரங்கள் கூட யாரிடமும் இல்லை ' என்கிறார் ஒரு பெண்மணி . சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த இரண்டு தோழிகள் மட்டும் எட்டு கோடி வரை வசூல் செய்து கொடுத்து விட்டு தாங்கள் ஏமாற்றபட்டது தெரிய வந்ததும் மயக்கமாகி போக உடன் வந்த உறவினர்கள் அவர்களை கைத்தாங்கலாக கூட்டி சென்றது கொடுமை . சென்னை அசோக்நகரை சேர்ந்த வெற்றிச்செல்வி

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்

Image
  நெல்லை போலீஸ் விசாரணைக்கு வந்தவர்களை ஏஎஸ்பி பல்லை பிடிங்கி சித்தரவதை செய்யப்பட்ட விவகாரத்தில் விகேபுரம் தனிப்பிரிவு காவலர் போகன், கல்லிடைகுறிச்சி தனிப்பிரிவு காவலர் ராஜ்குமார் ஆயுதப டைக்கு மாற்றம் செயது நெல்லை மாவட்ட எஸ்பி சரவணன் உத்தரவிட்டுள்ளார். இந்த நடவடிக்கை மீது அதிருப்தியில் உள்ள சமூக ஆர்வலர்கள் அரசை நோக்கி கேள்வி எழுப்பி வருகின்றனர். எத்தனையோ பாரம்பரிய வரலாறு கொண்ட மாவட்டங்களில் நெல்லையும் ஒன்று. அதே சமயம் குற்ற சம்பவங்களில் பதட்டமான மாவட்டமும்கூட. இந்நிலையில், இங்கு சட்ட ஒழுங்கை பேணி காப்பதில் காவல்துறைக்கு மிகப்பெரிய பொறுப்பும் கடமையும் உள்ளது. அவ்வாறு குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவர்களை சட்டத்தின் முன்பு நிறுத்தாமல் ஒரு தனி தண்டனை சாம்ராஜ்யத்தை உருவாக்கி கைதிகளின் பற்களை பிடுங்கியதாக ஏஎஸ்பி பல்வீர் சிங்க் மீது குரூர குற்றசாட்டுகள் எழுந்துள்ளது. இவரை தமிழக அரசு சஸ்பெண்ட் செய்தபோதே அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதாக பார்க்கப்பட்டது. இப்போது விசாரணை நடந்து வரும் நிலையில் முக்கிய சாட்சியான சூர்யா கீழே விழுந்து பல் உடைந்ததாக மீடியா முன்பு கூறி பரபரப்பை கிளப்பியு

ஏஎஸ்பி பல்வீர் சிங் காவலில் வைக்கப்பட்ட சித்திரவதை தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையம் (எஸ்எச்ஆர்சி) செவ்வாயன்று தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தது.

Image
  திருநெல்வேலி : காவல் உதவிக் கண்காணிப்பாளர் ( ஏஎஸ்பி ) பல்வீர் சிங் காவலில் வைக்கப்பட்ட சித்திரவதை தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையம் ( எஸ்எச்ஆர்சி ) தானாக முன்வந்து செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தது . அம்பாசமுத்திரம் போலீஸ் பிரிவில் 10 க்கும் மேற்பட்டோரின் பற்களை இடுக்கி மூலம் பிடுங்கி வன்முறையில் ஈடுபட்டதாக அதிகாரி மீது குற்றம் சாட்டப்பட்டது . இந்த விவகாரத்தை விசாரித்து ஆறு வாரங்களுக்குள் விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு ஐஜி / இயக்குனர் , புலனாய்வுப் பிரிவு , எஸ்ஹெச்ஆர்சிக்கு ஆணையம் அறிவுறுத்தி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது . ஏஎஸ்பி பல்வீர்சிங் இதற்கிடையில் , இந்த புகார்கள் குறித்து விசாரணை நடத்த திருநெல்வேலி கலெக்டர் கே . பி . கார்த்திகேயன் உத்தரவிட்டும் சேரன்மகாதேவி சப் டிவிஷனல் மாஜிஸ்திரேட் மற்றும் சப் கலெக்டர் எம் . டி . ஷபீர் ஆலம் செவ்வாய்க்கிழமை எந்த விசாரணையும் மேற்கொள்ளவில்லை . விசாரணையில் அவர் கருத்து தெரிவிக்கவும் கிடைக்கவில்லை . இருப்பினும் , கலெக்டருடனான சந்திப்பில் கலந்துகொள்வதற்காக ஆலம

மது அருந்தியதாக ப்ரீத் அனலைசர் காட்டிய விவகாரம்: காவல்துறை விளக்கம்

Image
  சென்னை சாலிகிராமம் பகுதியைச் சேர்ந்தவர் தீபக். இவர் ராயப்பேட்டை பகுதிக்கு வேலை விஷயமாக சென்று விட்டு எல்டாம்ஸ் சாலை வழியாக சாலிகிராமம் நோக்கி தன்னுடைய காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு பணியில் இருந்த தேனாம்பேட்டை சட்டம் - ஒழுங்கு காவலர்களான இளங்கோவன் உள்ளிட்டோர் தீபக்கின் வாகனத்தை மடக்கியுள்ளனர். அவர் மது அருந்தியுள்ளாரா என ப்ரீத் அனலைசர் இயந்திரத்தைக் கொண்டு சோதனை செய்தனர். அப்போது தீபக் மது அருந்தியிருப்பதாகவும், தீபக்கின் உடலில் 45 சதவிகிதம் ஆல்கஹால் இருப்பதாகவும் போலீசார் கூறியுள்ளனர் மது அருந்தும் பழக்கமே இல்லாத தீபக் இதை கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளார். காவலர்களிடம், தனக்கு மது அருந்தும் பழக்கமே இல்லை எனவும், உங்களுடைய இயந்திரம் கோளாறாக உள்ளது எனவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது தொடர்பாக ரசீதில் கையெழுத்திடுங்கள் என போலீசார் வற்புறுத்தியுள்ளனர். தொடர்ந்து தீபக் தான் மது அருந்தவில்லை என வாக்குவாதம் செய்ததால் போலீசார் வாகனத்தில் இருந்த மற்றொரு ப்ரீத் அனலைசர் இயந்திரத்தை எடுத்து 2 முறை சோதனை செய்தபோது, 2 முறையும் தீபக் மது அருந்தலில

திருவள்ளூரில் கைதான டாஸ்மாக் மேலாளர்-பார் உரிமத்துக்கு ரூ.1 லட்சம் லஞ்சம்

Image
  திருவள்ளூரில் பார் உரிமம் கேட்டு விண்ணப்பித்தவரிடம் ஒரு லட்ச ரூபாயை லஞ்சமாக வாங்கிய டாஸ்மாக் மேலாளரை, லஞ்ச ஒழிப்பு போலீஸார் கைது செய்துள்ளனர்.  திருவள்ளூர் மாவட்டத்தில் கிழக்கு, மேற்கு என் 2 மாவட்டங்களாக பிரித்து டாஸ்மாக் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தில் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர், திருத்தணி, பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை, ஆர்.கே.பேட்டை ஆகிய பகுதிகளில் 137 டாஸ்மாக் கடைகள் உள்ளன.    இந்நிலையில், திருவள்ளூரை அடுத்த போளிவாக்கம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் பார் அமைப்பதற்காக தாணு என்பவர் திருவள்ளூர் மேற்கு மாவட்ட டாஸ்மாக் மேலாளர் கலைமன்னனிடம் விண்ணப்பித்துள்ளார். அதற்கு, 'பார் நடத்த அனுமதி வழங்க ஒரு லட்சம் ரூபாயை லஞ்சமாக கொடுக்க வேண்டும் இல்லையேல் ஏற்கனவே செயல்பட்டு வரும் பாரையும் இழுத்து மூடுவேன்' என கலைமன்னன் தெரிவித்துள்ளார்.  ஏற்கனவே. காக்களூர், வேப்பம்பட்டு ஆகிய பகுதிகளில் பார் நடத்தி வரும் தாணு, தன்னிடம் ஒரு லட்சம் கேட்டதால் திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் புகார் கொடுத்தார்.  இதனையடுத்து காஞ்சிபுரம் - திருவள்ளூர் மாவட்ட